தமிழ்10

Monday, July 6, 2009

லா.ச.ரா.


சமிபமாகவே இலக்கிய தேடல் வேர் விட்டு கொண்டிருக்கிறது . காரணம் இன்னதென்று தெரியவில்லை . நண்பனின் ஆலோசனையின் பேரில் புத்தக கண்காட்சி ஒன்றில் லா.ச.ரா.வின் அபிதாவை வாங்கலானேன் . சரியாக நாற்பது வருடங்களுக்கு முந்தைய நாவல் .

நாவலின் போக்கில் காதல்,காமம் , கடவுள் என அனைத்தையும் கடந்து விட முடிகிற அவரின் எழுத்தின் ஆளுமை ஆச்சரியத்திற்குரியது . இது எனக்கு முதல் முறை என்பதால்தான் இந்த ஆச்சரியம். லா.ச.ரா .வின் மற்ற பல நாவல்களை வாசித்தவர்கள் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன் .


தனியொரு மனிதனின் காதல்,காம , பக்தி உணர்வுகளை உணர்ச்சியின் குவியலாய் குவிப்பது இந்த நாவல் . வாசிப்போர் யாவரும் நாவலின் மையப் பாத்திரமாகிவிடுவதே லா.ச.ரா எழுத்தின் சிறப்பு . உதாரணமாக நாவலின் மைய பாத்திரமொன்றிற்கு பெயரே கிடையாது . பெயரற்ற அந்த பாத்திரத்தின் வழியே தான் நாவலானது பயணிக்கிறது . பெயர் என்ன என்பது குறித்து நீங்கள் வாசிக்கும்போது எங்கும் யோசிக்க எத்தனிக்க முடியாது . ஏற்கனவே குறிப்பிட்டபடி நீங்களே பாத்திரமாகிவிட்டபின் , உங்கள் வழியே உங்களை பற்றி நீங்களே கூறுகையில் உங்கள் பெயர் பற்றி யோசிப்பிர்களா என்ன ?


ஆனால் இந்த நாவலின் பாத்திரங்கள் வாழும் வாழ்க்கை ,அவர்களின் உணர்ச்சிகள் யாவும் சராசரி மனிதன் அனுபவிக்காத ஒன்றே என தோன்றுகிறது .நூல் பழையதாயினும் இந்த வாசிப்பின் அனுபவம் மிகப்பெரும் பரவசம் .முடிந்தால் நீங்களும் பரவசப்படுங்கள் .

கிழக்கு பதிப்பகம் வெளியீடு .

பி .கு . இது என்னை போன்ற ஆரம்பநிலை ஆர்வலர்களுக்கு மட்டும் . மேதைகள் புறக்கணிக்கவும்