தமிழ்10

Saturday, May 23, 2009

நடந்தது என்ன?


கடந்த நான்கு நாட்களாக மண்டை குழப்பும் செய்தி இது . பிரபாகரன் உள்ளாரா அல்லது மாண்டரா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்பது பதிலாக இருக்கலாம் .பிரபாகரன் தவிர்க்கமுடியாத சூழலில் தனது முக்கியமான பிற தலைவர்களுடன் சிற்றூந்தில் தப்பிக்க முயலும்போது ஏவுகனை வீசி கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது .ஆனால் அவரது பிரேதத்தில் தீக்காயம் ஏதுமின்றி நெற்றிபொட்டில் குண்டடி காயம் மட்டும் இருந்தது . பின்பு போர்க்களத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவித்தது .ஏன் அவரது மரணத்தில் இத்தனை முரண்பட்ட தகவல் . எந்த ஒரு அவசர நிலையிலும் இயக்கத்தின் தலைவர்கள் ஓரிடத்தில் கூடவோ ஒன்றாய் தப்பிக்கவோ மாட்டர்கள் என்கிறார் எனது ஆசான் . இலங்கை அரசோ அனைவரும் ஓரிடத்தில் கொல்லப்பட்டதாக கூறுகிறது . புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரன் நலமுடன் உள்ளார் .இயக்கத்தை தொடர்ந்து வழி நடத்துவார் என்கின்றனர் .உண்மையை யாரும் யூகிக்க முடியாது . ஏனென்றால் போற்பகுதிக்கு எந்த ஒரு பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை.இலங்கை அரசு தருவதுதான் தகவல் .புலிகளோ பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாட்சியங்களை காட்டவில்லை.அனைத்து தமிழ் நாளேடுகளும் இந்த இரண்டு செய்தியையும் மாற்றி மாற்றி பிரசுரிக்கின்றதே தவிர உறுப்பு இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் நிலையை ஏறக்குறைய மறந்து விட்டது .தனக்கு சாதகமாய் செய்தி வெளியிடுவதால் இரு தரப்புமே புத்திசாளியகிவிடுகிறது. உண்மை தேடும் நானும் என்னை போன்ற பிற தமிழனுமே முட்டளாகின்றோம்

1 comment: